இடுகைகள்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

படம்
  ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும்  - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)       சினிமாவில் ஆவணப்படம் என்ற வகைமை ஒரு புவியலாளரின் ஆய்வுப்பயணத்தில் இருந்து தொடங்கியது. ரோமம் விற்பனை செய்யும் ஒரு பிரெஞ்சு நிறுவனம் 1910களில், அரிதான ரோமங்களைக் கண்டுபிடித்து வர எஸ்கிமோ பிரதேசத்தின் தொலை தூரப் பகுதிகளுக்கு ஆய்வாளர்களை அனுப்பி வைத்தது. 'ஆவணப்பட சினிமாவின் தந்தையாக' மாறியவர் அப்படியொரு பயணத்தில் உடன் சென்றவர் ஆவார். முக்கியமான நோக்கத்திற்காக என்பதை விட கேளிக்கைக்காகவே அவர் இந்தப் பயணத்தில் இணைந்தார். அதுபோன்ற ஒரு தொலைதூரப் பகுதிக்கு தன்னுடன் ஒரு கையடக்க கேமராவை அவர் கொண்டுசென்றார். அதன் மூலமே 'நானூக் ஆப் தி நார்த்' (Nanook of the north) பிறந்தது. அது ஆவணப்பட சினிமா என்ற கருத்தாக்கத்தில் புரட்சியை உண்டு பண்ணியது. அதை உருவாக்கியவர் வாழக்கையையும் மாற்றியமைத்தது.       எதார்த்தத்தைக் கலைத்துவத்துடன் பதிவு செய்து, எடுத்துக்கொண்ட விஷயத்தைத் தெளிவான முறையில் கைகளில் வழங்குவதான 'ஆவணப்படம்' என்பது தொடக்கத்தில் இருந்தே ஒரு புதிய கலை வடிவமாக உருப்பெற ஏங்கிக் ...

பரிவுணர்ச்சியால் வரும் பதவி -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
பரிவுணர்ச்சியால் வரும் பதவி -அழகுராஜ் ராமமூர்த்தி         ஆளுநர் ப்ரோ வாட் ப்ரோ எனக் கேட்க விஜய்க்கு வாய் வரவில்லையா..  அவரது ஊதுகுழலான காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரஸ்க்கு இடுப்பில் மாட்டியிருக்கும் உள்ளாடை கீழே விழுவது போல அவசரம் அதனால் கேட்கத் தான் செய்யும். ஆனால், அதேபோல ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு காங்கிரஸ் பல மாநிலங்களில் தொந்தரவு கொடுத்த பழைய வரலாற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும். திமுக.வின் உதவியால் மாநிலங்களவைக்கு ஒருவரை அனுப்பி இரண்டு மாதம் முடிவதற்குள் கூட்டணியை முறிப்பது எப்படிப்பட்ட துரோகம், சுயநலம். காங்கிரஸை நம்பி ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்கிற வகையில் இதே நிலை தவெக.வுக்கும் வரும். த.வெ.க ஆட்சி அமைக்க இருப்பதை நினைத்தால் பா.ஜ.க ஆட்சி அமைக்க இருப்பதைப் போன்ற வெறுப்பு உள்ளூர இருந்தாலும் மக்கள் வாக்களித்து விட்டார்கள். தனிப்பெரும்பான்மை இருக்கும் கட்சி ஆட்சியளிக்க உரிமை கோரும் போது அதனை ஆளுநர் மதித்தாக வேண்டும். மக்கள் என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது. முந்தைய கட்டுரையில் நான் குறிப்பிட்ட இரண்டு ...

Zoombies புரட்சி - அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
Zoombies புரட்சி - அழகுராஜ் ராமமூர்த்தி      த.வெ.க வின் மூலம் அமையப்போகும் அரசின் கீழ் வாழ்வதைவிட குடியரசுத் தலைவர் ஆட்சியில் வாழ்வது பரவாயில்லை என்ற எண்ணமே நேற்றிரவில் இருந்து மேலோங்குகிறது. தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கொடுக்கும் அவமரியாதையாகக் கூட இதனை நீங்கள் கருதலாம். அதைப்பற்றி எனக்கு எவ்வித கவலையும் இல்லை. சமீப நாட்களில் செக்காவின் கருத்தாக ஒன்று நாட்டு நலனில் அக்கறையுடையவர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.     "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?” என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்காவிடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்.     தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.     சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.     அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.      எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்...

மாணவர்களின் செய்தித்தாள் வாசிப்பு -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
  மாணவர்களின் செய்தித்தாள் வாசிப்பு -அழகுராஜ் ராமமூர்த்தி       கர்நாடக அரசுப் பள்ளிகளில் காலை 15நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது. இது ஒரு நல்ல முன்னெடுப்பு. சில விடயங்களைக் கட்டாயப்படுத்த வேண்டியுள்ளது. நான் பள்ளியில் படிக்கும்போது (இப்போதும் நடைமுறையில் உண்டு) நூலகம் என்ற பாடவேளை வாரத்திற்கு இரண்டு முறை இருக்கும். அப்போது பழைய வெகுமக்கள் இதழ்கள் செய்தித்தாள் முதலியன அனைவருக்கும் கொடுக்கப்படும். பாடவேளை முடியவும் அதனைத் திரும்ப ஒப்படைத்து விடுவோம். அந்தப் பாடவேளையில் சேட்டை செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் பலர் கொடுக்கப்படும் புத்தகங்களில் உள்ள படங்களையும் பெட்டி செய்திகளையும் பக்கத்தில் இருப்பவரிடம் காட்டி அது குறித்து கிண்டலாகவோ அல்லது ஆச்சரியமாகவோ பேசுவதுண்டு. சில இதழ்களிலோ செய்தித்தாள்களிலோ எதுவுமே இருக்காது என்றாலும் அதையும் சும்மா புரட்டிக் கொண்டிருப்பது உண்டு. ஓவிய ஆசிரியர் தான் நூலக பொறுப்பாளர். சில சமயங்களில் அவர் என்ன படித்தீர்கள் என கேட்பதும் உண்டு. அதில் ஒரு பாடவேளையில் அனைவரையும் கண்ணை மூடி நிமிர்ந்து உட்கார சொல்லி அவர் கதை போல...

கல்விக் கொள்கை வழியிலான மொழி ஒற்றைமயம் -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
  கல்விக் கொள்கை வழியிலான மொழி ஒற்றைமயம் -அழகுராஜ் ராமமூர்த்தி       புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை ஒட்டிய விவாதங்கள் அவ்வப்போது எழுந்து ஓய்வது வாடிக்கையாகவே உள்ளது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்திலும் மாணவர்களுக்கு மொழிப்பாடத்தின் தேவை அவசியம் என்பதற்கு உளவியல் நோக்கில் சில காரணங்கள் உண்டு. தொடக்கக் காலத்தில் மனிதன் மற்றொருவரிடம் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு எத்தனித்ததன் விளைவுகவே மொழி உருவானது. கருத்துப் பகிர்தல் என்பது பல்வேறு பரிமாணங்களை அடைந்து பல்வேறு துணைக் கருவிகளின் துணையுடன் மாற்றம் அடைந்துள்ளது. அத்தகைய துணைக் கருவிகள் படிப்படியாக மொழியைத் தன்வயப்படுத்தி மனிதர்களின் மனப்பதிவுகளிலும் மூளைப்பதிவுகளிலும் உள்ள மொழியை மறக்கடிக்கக்கூடியதாக மாறி வருகிறது. ஒருபுறம் சமூக வலைதளங்களின் வரவால் உலகெங்கிலும் இருப்பவர்களோடு நட்பு பாராட்டும் வசதியாக குறுஞ்செய்தியிலிருந்து காணொளிக் காட்சி பரிமாற்றம் வரையில் வளரந்திருப்பது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசுவதற்கு தயங்கும் இளைஞர்களின் எண்ணிக்க...

ரித்விக் கட்டக் - மொழிபெயர்ப்பு

படம்
ரித்விக் கட்டக் - மொழிபெயர்ப்பு (நாடகங்கள், நேர்காணல்கள்) தமிழில் -தீனன்   வாசிப்பதற்கான இணைப்புகள் : ரித்விக் கட்டக்: ஒரு புரட்சிக்காரனின் மனசாட்சி - தீனன் தீக்குரவை -முதல் அலை தீக்குரவை -இரண்டாம் அலை தீக்குரவை -மூன்றாம் அலை தீக்குரவை  -  நான்காம் அலை வங்காளத் திரைப்படங்கள் நேற்றும் இன்றும்: ரித்விக் கட்டக் நேர்காணல்    ( தமிழில் -தீனன்) உயிர்வலி (பகுதி 1)  உயிர்வலி (பகுதி 2) உயிர்வலி (பகுதி 3)  உயிர்வலி (பகுதி 4) ரித்விக் கட்டக் நேர்காணல் (தமிழில் -தீனன்) அணங்கு (பகுதி - 1) அணங்கு (பகுதி -2 ) அணங்கு (பகுதி -3 ) அணங்கு (பகுதி -4 )