இடுகைகள்

வாழ்வே செயல் "ம. இலெ. தங்கப்பா" -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
  வாழ்வே செயல் "ம. இலெ. தங்கப்பா" -அழகுராஜ் ராமமூர்த்தி      2018ஆம் ஆண்டு ம.இலெ. தங்கப்பா, பிரபஞ்சன், க.ப.அறவாணன் ஆகியோர் மறைந்தனர். அதுதான் எனக்கு ம.இலெ.தங்கப்பா குறித்த அறிமுகமாகவும் அமைந்தது.  பேராசிரியர் எஸ்.இரவிச்சந்திரனுடன் தோழர் வேலாயுதம் பொன்னுசாமி, விஜய் ஐயப்பன் அண்ணன் ஆகியோரோடு நானும் பேசிக்கொண்டிருந்த நாளொன்றில் தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பாவிற்கும் ஆய்வறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் இடையிலான எழுத்துத் தொடர்பு மற்றும் த. கோவேந்தன் குறித்து பேசப்பட்டது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை படிக்கும் போது வாரம் ஒரு ஆவணப்படத்தைத் திரையிடும் முயற்சியாக தொடங்கிய "WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION" நிகழ்ச்சியில் புதுச்சேரி வரலாற்று ஆய்வு அறக்கட்டளை தயாரிப்பில் பி.என்.எஸ் பாண்டியன் இயக்கிய ம.இலெ.தங்கப்பாவின் "வானகத்தின் வாழ்வியக்கம்" ஆவணப்படத்தைத் திரையிடவும் எண்ணம் இருந்தது. காலம் ஒத்துழைக்கவில்லை. தென்தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற தமிழ் ஆளுமைகளென்று பாரதியார், கி.ராஜநாராயணன், க. பஞ்சாங்கம், ராஜ் கௌதமன், ம.இலெ. தங்கப்பா ...

தனியறையில் நிகழும் சாவு -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
தனியறையில் நிகழும் சாவு -அழகுராஜ் ராமமூர்த்தி    ஈராக்கின் கிறிஸ்து (உலகச் சிறுகதைகள்)  தொகுப்பும் மொழியாக்கமும் -கார்த்திகைப் பாண்டியன்       12 சிறுகதைகளைக் கொண்ட ஈராக்கின் கிறிஸ்து என்ற இந்தத் தொகுப்பு உயிர்மை இதழில் 2021 நவம்பர் முதல்‌ 2022 நவம்பர் வரை வெளியான மொழிபெயர்ப்பு கதைகளின் தொகுப்பு. இந்நூலுக்கு சிறப்பான முன்னுரையொன்றை கொள்ளு நதீம் அளித்துள்ளார். இப்பதிவில் ஒவ்வொரு கதை குறித்த கருத்துகளையும் தனித்தனியே பார்க்கலாம்.     அலி-எல்-மாக் என்ற சூடான்‌ எழுத்தாளர் எழுதிய “நாற்பத்தியோரு ஸ்தூபிகள்” என்ற கதையில் தனது அம்மாவை ஆங்கிலேய மருத்துவமனையில் ஒருவன் சேர்த்திருக்கிறான். அவள் அங்கு மரணமடைகிறாள். இதுதான் கதை. கதையில் அந்த ஊரில் பயன்படுத்தப்படும் (பியாஸ்டர்) பணம், காப்டிக் எனும் வட ஆப்பிரிக்க கிறிஸ்தவப் பிரிவு, மாதி எனப்படும் அரேபியா பாடல் ஆகியன சுட்டப்படுகின்றன. மசூதிக்கு பெரிய மசூதி என்ற பெயர் வர அதற்குள் இருக்கும் ஸ்தூபி தான் காரணம் என்கிற செய்தி இடம்பெறுகிறது. எப்படி தமிழ்நாட்டில் பெரிய கோயில் என்ற அடையாளம் இருக்கிறதோ அதைப்போன்ற அடையாளமாக ...

தொல்குடித் தொடர்பும் நவீன வீச்சும் (குமார் அம்பாயிரத்தின் "ஈட்டி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
  தொல்குடித் தொடர்பும் நவீன வீச்சும்  ( குமார் அம்பாயிர த்தின் " ஈட்டி " சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)  -அழகுராஜ் ராமமூர்த்தி      2022ல் வாங்கிய ஈட்டி சிறுகதைத் தொகுப்பை 2023ல் கருங்குருவி கவிதைகள் கவிதை தொகுப்பு தனிமைவெளி வெளியீடாக வரும் அறிவிப்பை தோழர் பாலைநிலவன் வெளியிட்டதை தொடர்ந்து வாசித்தேன். வாங்கிய பின் ஒரு வருடம் கழித்து இத்தொகுப்பை வாசிப்பதற்கு காரணம் உண்டு. பலமுறை வாசிக்க வேண்டும் என கையில் எடுக்கும் போதெல்லாம் தமிழ்வெளி பதிப்பகத்தின் முகப்பு படத்தைப் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். இது பொறுமையாக வாசிக்க வேண்டிய தொகுப்பு என்பதை அப்படம் சொன்னது. A. செல்வம் என்பவர் வரைந்த படம் அது. ஈட்டி கதை தொகுப்புக்கு ஏற்ற வகையில் அப்படம் பொருந்தி நிற்பதை கதைகளை வாசித்து முடிக்கையில் உணர்ந்தேன்.        ஈட்டி தொகுப்பு பற்றிய இப்பதிவிற்குள் செல்லும் முன் குமார் அம்பாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய சில செய்திகளை அறிவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அவரது வாழ்க்கைப்போக்கின் வாடைகள் வார்த்தைகளாகி கதைகளாக விரிவடைந்துள்ளன என்பதை ஈட்டி கதைத்தொகுப்...

WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION -5

படம்
         Helen Langridge இயக்கிய MOVING HALF THE MOUNTAIN Building The (Burma's) Death Railway ஆவணப்படம் திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சயாம் மரண ரயில் பாதைத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகள், உழைப்புச் சுரண்டல், அடிமைகள், கூலித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஆவணப்படத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் மற்றும் கருத்து சொன்னவர்கள், வன்புணர்வு நடவடிக்கைகள், வணிகர்கள், நாட்டார் பாடல் பதிவுகள், ஆசிய பரப்பில் பரவியுள்ள தமிழர்கள், கல்வியின் முக்கியத்துவம், அடிமை வாழ்நிலை, நாக்கை அறுக்கும் கொடூரமான தண்டனைகள், இலங்கைத் தமிழர்களுக்கு இடையிலான பிரிவினைகள், மலேசியா தமிழர்களுக்கு இடையிலான வர்க்க முரண், பர்மாவின் போர்ச்சூழல், இரயிலின் வருகை, உழைப்பு ஆகியனவற்றைப் பேசும் சயாம் மரண ரயில், சயாம் பர்மா மரண ரயில் பாதை மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு, நினைவுச்சின்னம், பட்டத்து யானை, குருதி ஆட்டம், கோபல்ல கிராமம், காலனியம், தமிழக அடிமைகள், ஜெயசீல ஸ்டீபனின் சில நூல்கள், கட்டுமான வரலாறு என்று பல நிலைகளில் உரையாடல் வளர்ந்தது.

WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION -4

படம்
     இரா. நடராஜன் எழுதிய குறுநாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஆயிஷா படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலத்திய கல்வி நிலைகள், ஆசிரியப் பணி அனுபவங்கள், தாங்கள் பள்ளி, கல்லூரியில் சந்தித்த சம்பவங்கள், பெண் கல்வி, ஆயிஷா எனும் குறியீடு, படத்தில் இடம்பெற்றுள்ள வேதியியல் சார்ந்த தகவல்களில் உள்ள முரண், படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தின் பின்னணி, சமீப காலத்தில் மாணவர் சமூகம் பெறும் இன்னல்கள், ஆசிரியர்களின் செயல்பாடுகள், கல்வி முறை, எதிர்காலம் என்னவாகும் என்பது பற்றிய அனுமானங்கள், குறைந்தபட்ச தீர்வுகளென கலந்துரையாடலும் நடைபெற்றது.

WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION -3

படம்
        லீனா மணிமேகலை இயக்கி நடித்த பெண்ணாடி (MY MIRROR IS THE DOOR) படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள சங்கப் பாடல்கள் அது உணர்த்தும் பொருள், குறியீடுகளைப் புரிந்து கொள்ள முற்படுதல், குறியீட்டுக் காட்சி சொல்லும் சேதிகள், படத்தின் பின்னணி காட்சி மற்றும் இசையுடன் கூடிய பாடல், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கவிதைக்குள் அடங்கியுள்ள ஓர்மை, சங்க இலக்கிய காலம் மற்றும் ஆய்வுகள் என உரையாடல் வளர்ந்தது.

WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION -2

படம்
        Nick Randall இயக்கிய THE FINAL DAYS OF THE NAZIS ஆவணப்படம் திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடல் போரின் இறுதி நாட்களுடைய முக்கியத்துவம், பொதுமக்கள் அடையும் பாடுகள், ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் கலை ஈடுபாடு, வன்முறை உணர்வுடனான போர்க்குணம், அழித்தொழிப்பு நடவடிக்கை, மனப்பிறழ்வு, இரண்டாம் உலகப் போரின் விளைவுகள், ஜெர்மனி மற்றும் யூதர்களிடையிலான மோதல் போக்கு என்று பல்வேறு தளங்களில் விரிவடைந்ததோடு சமகால போர் நிகழ்வுகளையும் உள்ளடக்கி இருந்தது.

WaTCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION -1

படம்
     பேராசிரியரும் எழுத்தாளருமான ராஜ் கௌதமனின் வாழ்க்கை நிகழ்வுகளை அறியும் முகமாக “வரலாற்றை வழி மறித்தவன்" ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலித் இலக்கியம், தற்கால படைப்புகள், புதிதாக எழுத வருதல், தலித் வாழ்நிலை, புனைவு மற்றும் அல்புனைவு, ஆய்வு என பல நிலைகளில் உரையாடலும் நடைபெற்றது.  

அசல் அரங்கப் பிரதி - அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
அசல் அரங்கப் பிரதி - அழகுராஜ் ராமமூர்த்தி     சிகப்புக் கண்ணாடி தமிழ் நாடகங்கள் -ஞா.கோபி      யாழ் அரங்கத்தில் நாடக உரையாடலை உரையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. நாடகக் கலைஞர்கள் உரையாடிய அந்நிகழ்வில் கலைஞர் அல்லாத நான் எப்படி உரையாடுவது என்ற தயக்கத்துடனே அந்த வாய்ப்பை விட முடியாமல் உரையாடலுக்குச் சென்றேன் அந்நாளில் நினைவு நூலாக கொடுக்கப்பட்டது ஞா. கோபி எழுதிய சிகப்புக் கண்ணாடி நாடகப் பிரதி.        2006, 2007, 2009, 2014, 2015, 2017, 2018 என்று 2006 இல் இருந்து 2018 வரையிலான காலப்பகுதியில் வெளியாகி நடிக்கப்பட்ட நாடகங்களின் தொகுப்பாக அமைந்திருக்கும் சிகப்புக் கண்ணாடி நாடக நூல் அசலான அரங்கப் பிரதி. நாடகம் வெளியான வருடங்களைக் குறிப்பிடுவதற்கும் நாடகத்தின் உள்ளடக்கத்திற்கும் இருக்கும் தொடர்பு முக்கியமானது. இதனை "நான் வளர்மதி" நாடகத்தை வாசிக்கும்போது நன்கு விளங்கிக்கொள்ளலாம். நாடக அரங்கப் பிரதிக்கும் எழுத்துப் பிரதிக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டு. பொதுவான நாடக இலக்கியப் பிரதிகளில் உரையாடல்களே நாடகத்தை நகர்த்திச் செல்லும் அம்சம்...

பரிசளிக்கப்பட்ட இரு நூல்கள் -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
பரிசளிக்கப்பட்ட இரு நூல்கள் -அழகுராஜ் ராமமூர்த்தி    நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் -வெ. இறையன்பு   வெ.இறையன்பு எழுதியுள்ள “நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்” என்கிற நூலை 24/04/ 2022 அன்று காமாட்சி காயத்ரி அக்கா பரிசளித்தார். இந்நூலில் சுய அனுபவங்களை பல்வேறு வடிவில் கட்டுரைகளாக அமைத்திருக்கிறார் இறையன்பு. 24 கட்டுரைகள் இருக்கக்கூடிய இந்த நூலில் “கம்பரும் இட ஒதுக்கீடும்” என்கிற கட்டுரையில் மட்டும் இலக்கியச் செய்திகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் காணப்படும் 48 ராமாயணங்களின் பெயர் பட்டியலும் இடம்பெற்று இருக்கிறது. சில கட்டுரைகளில் பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர், திருவள்ளுவர், கம்பரோடு மேலும் சில அறிஞர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் இறையன்புவின் பார்வைக்குள் வந்த வேலை பார்க்கும் இடங்களில் தன்னை அர்ப்பணித்து மனப்பூர்வமாக பணியாற்றியவர்கள் பெருமையுடன் நினைவுகூரப்பட்டுள்ளனர். இதில் கவனிக்கத்தக் இரண்டு சம்பவங்கள் நைனேஷ் தவே என்கிற அரசு அதிகாரியும் அகிலா என்கிற பள்ளி ஆசிரியரும் ஆவர். இந்த இரண்டு சம்பவங்களையும சொல்லும் பாணியில் உணர்வைக் கடத்த இறையன்பு முயற்சி செய்துள்ளார். சம்பவத்த...