"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி
நான் கல்வியியல் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் காலகட்டத்தில் கல்வியியலைத் தாண்டி அதிகமாக இலக்கிய வாசிப்பிற்குரிய நேரம் மற்றும் சூழல் வாய்த்தது. ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கும் செ.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் பழந்தமிழில் புலமை பெற்றவர். 83 வயதைக் கடந்துள்ள அவரது இன்றைய செயல்பாடுகள் என்னை போன்ற இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியன. சுறுசுறுப்பும் ஓயாத உழைப்புமாக செயல்படும் அவர் எப்போதும் கண்டித்துணர்த்துவதோடு பாராட்டும் குணமும் ஒருங்கே உடையவர். பழந்தமிழில் புலமை பெற்ற தமிழாசிரியர்கள் இக்கால இலக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. அதன் தன்மை மீது ஏதோ ஓர் ஒவ்வாமை உடையவர்களாகவே காணப்படுகின்றனர். அந்தக் கணக்கில் ஐயாவையும் சேர்க்கலாம். இருந்தாலும் மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கக்கூடியவராக தினமும் புதிதாக எதையேனும் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை பார்க்கும்போதெல்லாம் வலியுறுத்தாவார். நானும் சந்துரு அண்ணனும் மதிப்பெண் சான்றிதழ் வாங்க போன அன்று கல்லூரியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அ...







கருத்துகள்
கருத்துரையிடுக