சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்


 சூழல் அறம் - சுப்ரபாரதிமணியன் 

அழகிய சிங்கார வனங்களும், மனதை குளிர வைக்ககூடிய குளிர்ச்சியான ஆறுகளும், வானுயர்ந்த மலைகளும், குன்றுகளும், சமநிலை காவலர்களாகிய விலங்குகளும், பரந்து விரிந்த காடுகளை தனது எச்சத்தால் உருவாக்கிவிட்டு, ஒன்றும் தெரியாதவர்கள் போல இசை வாசித்து இன்பமாய் பறக்கும் பறவைகளும், பற்பல புதையல்களை தன்னுள் கொண்டுள்ள கடல்களும், சூரியனின் கோவத்தை மறைக்கும் மேகங்களும் நிறைந்தது தான், நமது சுற்றுச்சூழல். 

நமது சுற்றுச்சூழலில் மனிதனும் அடக்கம். ஆனால் அந்த கள்ளம் கபடம் அற்ற இயற்கையோடு மனிதனையும் சேர்த்து சொல்ல முடியாதல்லவா, எனவே தனித்து கூறுகிறேன்.

இந்த வஞ்சகம் நிறைந்த மனிதனால், சுற்றுச்சூழல் எவ்வளவாய் பாழ்படுகிறது என்பதை பற்றி தெளிவாக விளக்குகிறது இந்த புத்தகம்.

*"நீரின்றி அமையாது உலகு" * என்றார் வள்ளுவர். உயிர் ஆதாரமான நீர் எவ்வாறெல்லாம் விற்பனைக்கு உற்படுத்தப்படுகிறது, நீராதாரங்கள் எவ்வாறெல்லாம் அழிக்கப்படுகிறது என்பதை பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. *உயிர் போகின்ற காரியம்* அல்லவா எனவே முதல் பல பக்கங்களில் நீருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பல அரிய புள்ளிவிவரங்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சாதாரண மக்களுக்கு *1 லிட்டர் தண்ணீர் 10 ரூபாய்* ஆனால் கார்பரேட் நிறுவனங்களுக்கு *பல லட்சம் லிட்டர் தண்ணீர் சில ஆயிரங்கள்* இதைச்செய்வது அரசாங்கம் சற்று வெட்கமாக தான் இருக்கிறது.

புள்ளிவிவரங்களை தேடி எடுத்து தந்திருக்கும் ஆசிரியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

'Even the rain' என்ற ஸ்பானிய திரைப்படம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு இருந்த கவலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

*இவர்கள் மழையையும் விற்று விடுவார்கள்*

நியூட்ரினோ, அணு உலைகள் பற்றி தெளிவாக மிகச்சரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னை சற்று சிந்திக்க வைத்தது என்ன என்றால்..

தேர்தல் சமயங்களில் அரசியல்வாதிகள் உறுதிமொழிகள் கொடுப்பார்கள் அல்லவா.

அதே போல் இன்னும் சில காலங்களில் *' காற்று சிலிண்டர்கள் கொண்ட காற்று கொட்டகைகளை அமைத்து மக்களை மூச்சுத்திணறல்களில் இருந்து காப்பாற்றுவோம்'* என்று வாக்குறுதி கொடுப்பார்கள் என்பது தான்.

கடந்த வருடம் டில்லியில் வரலாறு காணாத காற்று மாசுப்பாடு ஏற்பட்டது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

கனிம வளங்கள் அபகரிப்பு, மரபணு மாற்றம், பார்சீனியம், ஆஸ்பெஸ்டாஸ், புதிய வகை உணவு, மின் குப்பை போன்ற எதையும் தவற விடவில்லை.

அனைத்திற்கும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தீர்வுகள் பற்றி நம்மை யோசிக்க வைக்கிறது.

ஆசிரியரும் தீர்வுகளை பட்டியல் இட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மற்றபடி, சூழலியல் சார்ந்து இயங்கக்கூடியவர்களுக்கு இந்நூல் ஓர் *பாட நூல் வேதநூல்* என்று தாராளமாக கூறலாம்       

                                                           - த.செயபிரகாசு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அசல் அரங்கப் பிரதி - அழகுராஜ் ராமமூர்த்தி

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கி.ராஜநாராயணன் பற்றி -ரா.அழகுராஜ்