சூழல் அறம் - சுப்ரபாரதிமணியன் அழகிய சிங்கார வனங்களும், மனதை குளிர வைக்ககூடிய குளிர்ச்சியான ஆறுகளும், வானுயர்ந்த மலைகளும், குன்றுகளும், சமநிலை காவலர்களாகிய விலங்குகளும், பரந்து விரிந்த காடுகளை தனது எச்சத்தால் உருவாக்கிவிட்டு, ஒன்றும் தெரியாதவர்கள் போல இசை வாசித்து இன்பமாய் பறக்கும் பறவைகளும், பற்பல புதையல்களை தன்னுள் கொண்டுள்ள கடல்களும், சூரியனின் கோவத்தை மறைக்கும் மேகங்களும் நிறைந்தது தான், நமது சுற்றுச்சூழல். நமது சுற்றுச்சூழலில் மனிதனும் அடக்கம். ஆனால் அந்த கள்ளம் கபடம் அற்ற இயற்கையோடு மனிதனையும் சேர்த்து சொல்ல முடியாதல்லவா, எனவே தனித்து கூறுகிறேன். இந்த வஞ்சகம் நிறைந்த மனிதனால், சுற்றுச்சூழல் எவ்வளவாய் பாழ்படுகிறது என்பதை பற்றி தெளிவாக விளக்குகிறது இந்த புத்தகம். *"நீரின்றி அமையாது உலகு" * என்றார் வள்ளுவர். உயிர் ஆதாரமான நீர் எவ்வாறெல்லாம் விற்பனைக்கு உற்படுத்தப்படுகிறது, நீராதாரங்கள் எவ்வாறெல்லாம் அழிக்கப்படுகிறது என்பதை பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. *உயிர் போகின்ற காரியம்* அல்லவா எனவே முதல் பல பக்கங்களில் நீருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பல அர...
கருத்துகள்
கருத்துரையிடுக